News Just In

2/22/2021 09:10:00 AM

கடலில் நீராடச்சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி; யாழ். தொண்டமனாறு பகுதியில் சோகம்..!!


தொண்டமனாறு கடலில் நீராடச்சென்ற வேளையில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்தையடுத்து உயிரிழந்துள்ளார்.

பிரதேச வைத்தியசாலையில் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 17 வயதுடைய குறித்த சிறுவன் உடுப்பிட்டி சந்தை பகுதியைச் சேர்ந்தவர் என வல்வெட்டித்துறை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: