News Just In

2/20/2021 01:33:00 PM

மோட்டார் சைக்கிள் கடலுக்குள் பாய்ந்ததில் ஒருவர் பலி - யாழில் சம்பவம்..!!


யாழ்ப்பாணம், பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கற்கோவளத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பவிதரன் என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை குறித்த வீதியூடாகப் பயணித்தவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






No comments: