News Just In

11/24/2020 03:04:00 PM

பல்கலைக்கழங்களில் பரீட்சைகளை நடத்தும் முறைமைகள் குறித்து இந்தவாரம் இறுதி முடிவு!!


இலங்கையில் பல்கலைக்கழங்களில், பரீட்சைகளை நடத்தும் முறைமைகள் குறித்து, இந்தவாரம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அபேகோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இணையளத்தின் ஊடாக பரீட்சைகளை நடத்துவது, வழக்கமான விடயம் கிடையாது என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், இது குறித்து ஆராய்ந்து, இந்த வாரத்துக்குள் உரிய தீர்மானமொன்று எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.

No comments: