
முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கு இன்று முதல் பல கட்டங்களின் கீழ் பாடசாலைளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்றைய தினத்தில் 200 க்கும் அதிக எண்ணிக்கையில் மாணவர் தொகையை கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவில் முதலாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்கள் மாத்திரம் சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளைய தினம் இரண்டாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.
இதேவேளை, 200 க்கும் அதிக எண்ணிக்கை கொண்டு பாடசாலைகளின் சிரேஷ்ட பிரிவு மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதற்கும் விசேட முறைமை பின்பற்றப்படவுள்ளது.
இதற்கமைய இன்றைய தினத்தில் 6,10,11,12, மற்றும் 13 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
அத்துடன் செவ்வாய்கிழமைகளில் 7,10,11,12, மற்றும் 13 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வருகைத்தர வேண்டும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய கொரோனா நிலைமை தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகரிகள் உறுதிப்படுத்தும் வரையில் இந்த நடைமுறை செயல்ப்படுத்தப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகளில் இந்த நடைமுறை செயற்படுத்தப்பட மாட்டாது எனவும் அந்த பாடசாலைகளுக்கு வழமை போன்று அனைத்து மாணவர்களும் சமூகமளிக்க வேண்டும் எனவும் கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
இன்று முதல் கல்வி பணிக்குழாமின் அனைவரும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும்.
அவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக சுகாதாரம் மற்றும் ஒழுக்க பாதுகாப்பு பொறுப்புக்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு பாடசாலைக்கு மாணவர்கள் சமுகமளிப்பதை படங்களில் காணலாம்
No comments: