அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கு கடந்த 15ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்த தற்காலி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சரவை அமைச்சர் பந்துல குணவர்தன , நாடு தழுவிய ரீதியில் பல பிரதேசங்களில் புதிதாக நகர சபைகள் உருவாக்குவதற்கான தேவை காணப்படுவதால் ஒரு பிரதேசத்திற்கு மாத்திரம் விசேட வர்த்தமானி வெளியிடாமல் புதிதாக உருவாக்கவுள்ள நகர சபைகள் அனைத்திற்கும் ஒரே வர்த்தமானி வெளியிட கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது நகர சபை உருவாக்கத்திற்கான யோசனையை 2018ம் ஆண்டு உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பதவி வகித்த பைஸர் முஸ்தபா சமர்ப்பித்திருந்தார். இந்த பத்திர யோசனைக்கு அமையவாகவே சாய்ந்தமருது நகர சபை உருவாக்கத்திற்கு கடந்த15ம் திகதி சனிக்கிழமை அங்கிகாரம் வழங்கபட்டடிருந்தது.
வெளியிடப்பட்ட வர்த்தமானி மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதாவது நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் புதிதாக நகர சபை உருவாக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. சனத்தொகையினை அடிப்படையாகக் கொண்டு நகர சபைகள் உருவாக்கப்படுகின்றன.அதனடிப்படையில் பார்க்கும் போது கொழும்பு மாவட்டத்தில் தற்போது உள்ள நகர சபைகளை காட்டிலும் மேலதிகமாக புதிய நகர சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.
சாய்ந்தமருது நகர சபைக்கு மாத்திரம் விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்க முடியாது.நாடு தழுவிய ரீதியில் புதிதாக நகர சபை உருவாக்க வேண்டிய தேவை காணப்படுவதால் அனைத்து தீர்மானங்களையும் ஒன்றுப்படுத்திய வர்த்தமானியே வெளியிடப்படும். இதன் காரணமாகவே சாய்ந்தமருது நகர சபை உருவாக்கத்திற்கு ஏற்கெனணவே விடுக்கப்பட்ட வர்த்தமானி தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

No comments: