தைப்பொங்கல் விழா ..........!
பண்பாடு சிறக்க.
பகுத்தறிவு விழிக்க,
புண்பட்ட இதயங்கள் ஆற.
புத்துணர்வால் அவர்கள் தேற.
நன்மைகள் பலவும் விளைய.
நயவஞ்சக அரசியல் தொலைய.
பெருமதியோரின் பெறுமதிகள் பெருக.
சிறுமதியோரின் சிறுமைகள் சிறுக
தைமகளே வருவாய்.
தமிழர்க்குத் தக்கதோர் தீர்வு தருவாய்.
இதயபூர்வமான வாழ்த்துகளை
உதயமான தைத்திருநாளுக்காய்
தமிழர்க்குக் கூறுகின்றேன்.

No comments: