News Just In

11/12/2019 10:51:00 AM

கரப்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி

கரப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியானது நீர்கொழும்பு கடற்கரை பூங்காவில் டிசெம்பர் மாதம் 20, 21, 22ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

ஆண் பெண் இருபாலாருக்குமான போட்டிகள் இதன் போது நடைபெறும். இப்போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இலங்கை கடற்கரை கரப்பந்தாட்ட சங்கம், 
இலக்கம் 33, ரொரிங்டன் பிளேஸ், 
கொழும்பு 07

No comments: