அக்கரைப்பற்று கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையில் அண்மையில் நடைபெற்ற சிறுவர் மெய்வல்லுநர் (Athletics) – 2026 போட்டித் தொடரில், பள்ளிக்குடியிருப்பு அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயம் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, கலப்பு பிரிவின் ஒட்டுமொத்த சம்பியன் கிண்ணத்தை வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது.
கோட்டத்திலுள்ள 10 பாடசாலைகள் பங்கேற்ற இப்போட்டியில், அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் அனைத்து வயதுப் பிரிவுகளிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டனர்.
கடந்த 2025ஆம் ஆண்டில் தரம் 3, 4 மற்றும் 5 ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடத்தைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனாகத் தெரிவான அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயம், 2026ஆம் ஆண்டிலும் அதே சாதனையை மீண்டும் நிகழ்த்தி கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் தனது சிறப்பான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வெற்றிக்குப் பின்னால் பாடசாலை அதிபர் எம்.ஜே.எம். அன்வர் நெளஷாத் அவர்களின் சிறந்த வழிகாட்டல், திட்டமிட்ட பயிற்சி, ஊக்குவிப்பு மற்றும் அர்ப்பணிப்பான தலைமைத்துவம் முக்கிய பங்காற்றியுள்ளதாக பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வெற்றியின் மூலம் மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதிலும், ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் போட்டி மனப்பான்மையை வளர்ப்பதிலும் அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயம் தொடர்ந்து முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருவதாக கல்விச் சமூகத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கோட்டத்திலுள்ள 10 பாடசாலைகள் பங்கேற்ற இப்போட்டியில், அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் அனைத்து வயதுப் பிரிவுகளிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டனர்.
கடந்த 2025ஆம் ஆண்டில் தரம் 3, 4 மற்றும் 5 ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடத்தைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனாகத் தெரிவான அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயம், 2026ஆம் ஆண்டிலும் அதே சாதனையை மீண்டும் நிகழ்த்தி கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் தனது சிறப்பான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வெற்றிக்குப் பின்னால் பாடசாலை அதிபர் எம்.ஜே.எம். அன்வர் நெளஷாத் அவர்களின் சிறந்த வழிகாட்டல், திட்டமிட்ட பயிற்சி, ஊக்குவிப்பு மற்றும் அர்ப்பணிப்பான தலைமைத்துவம் முக்கிய பங்காற்றியுள்ளதாக பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வெற்றியின் மூலம் மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதிலும், ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் போட்டி மனப்பான்மையை வளர்ப்பதிலும் அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயம் தொடர்ந்து முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருவதாக கல்விச் சமூகத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
No comments: