டிஜிட்டல் மயமாக்கல் என்பது அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டம் எனவும் அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை கொண்ட, வினைத்திறனான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான ஒரு முறைமை உருவாகும் அதேவேளை, நாட்டின் முறைசாரா பொருளாதாரத்தின் பங்களிப்பை படிப்படியாக முறையான பொருளாதாரத்திற்குள் உள்வாங்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த (cash-lite) பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் (Merchant Discount Rate – MDR) முழுமையாக நீக்கப்படுவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, Gov Tech நிறுவனம், LankaPay நிறுவனம் மற்றும் நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பரிமாற்றங்களின் போது நிலவும் தடைகளை நீக்குதல், பரிசுகள் மற்றும் சலுகைகள் மூலம் மக்களை ஊக்குவித்தல், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல் ஆகிய நான்கு முக்கிய காரணிகளின் அடிப்படையில் இது செயற்படுத்தப்படுகிறது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவிக்கையில், பரிமாற்றங்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் எமது சமூகத்தில் நிலவினாலும், அந்தப் பிணைப்பை பழைய காகிதப் புத்தகத்திலிருந்து புதிய டிஜிட்டல் முறைமைக்கு மாற்ற நாம் இன்னும் தவறியுள்ளோம். எனவே, மக்களுக்கு மிகவும் எளிதான மற்றும் வினைத்திறனான ஒரு முறையாக இந்தப் புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று தெரிவித்தார்.
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த (cash-lite) பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் (Merchant Discount Rate – MDR) முழுமையாக நீக்கப்படுவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, Gov Tech நிறுவனம், LankaPay நிறுவனம் மற்றும் நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பரிமாற்றங்களின் போது நிலவும் தடைகளை நீக்குதல், பரிசுகள் மற்றும் சலுகைகள் மூலம் மக்களை ஊக்குவித்தல், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல் ஆகிய நான்கு முக்கிய காரணிகளின் அடிப்படையில் இது செயற்படுத்தப்படுகிறது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவிக்கையில், பரிமாற்றங்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் எமது சமூகத்தில் நிலவினாலும், அந்தப் பிணைப்பை பழைய காகிதப் புத்தகத்திலிருந்து புதிய டிஜிட்டல் முறைமைக்கு மாற்ற நாம் இன்னும் தவறியுள்ளோம். எனவே, மக்களுக்கு மிகவும் எளிதான மற்றும் வினைத்திறனான ஒரு முறையாக இந்தப் புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று தெரிவித்தார்.
No comments: