
தமிழக சட்டசபை தேர்தலில் 85வீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73வீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த முறை வாக்குப்பதிவு வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்த வாக்குப்பதிவு உயர்வு எதை உணர்த்துகிறது? வாக்குப்பதிவு அதிகரிப்புக்கும், ஆட்சி மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இந்தியாவில் இருக்கும் தேர்தல் கொள்கை வகுப்பாளர்களால் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தமாக 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4.88 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூரில் 92.64வீத வாக்குகளும், சேலத்தில் 90.70வீத வாக்குகளும், தருமபுரியில் 90.14வீத வாக்குகளும், ஈரோட்டில் 90.10வீத வாக்குகளும், நாமக்கல்லில் 90வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் இதுவரையிலான தேர்தல்களில் வாக்குப்பதிவுகளின் அடிப்படையில்,
1967 சட்டசபை தேர்தல் - 76.57வீதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதன்முறையாக திமுக வென்றது
1971 சட்டசபை தேர்தல் - 72.10வீதம் திமுக ஆட்சி தொடர்ந்தது
1977 சட்டசபை தேர்தல் - 61.58வீதம் ஆட்சி மாற்றம் நடைபெற்று முதன்முறையாக அதிமுக வெற்றி பெற்றது
1980 சட்டசபை தேர்தல் - 65.42வீதம் அதிமுக ஆட்சி தொடர்ந்தது
1984 சட்டசபை தேர்தல் - 73.47வீதம் அதிமுக ஆட்சி தொடர்ந்தது
1989 சட்டசபை தேர்தல் - 69.69வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
1991 சட்டசபை தேர்தல்- 63.84வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது முதன்முறையாக ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்.
1996 சட்டசபை தேர்தல் - 66.95வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
2001 சட்டசபை தேர்தல் - 59.07வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது
2006 சட்டசபை தேர்தல் - 70.82வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
2011 சட்டசபை தேர்தல் - 78.01வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது
2016 சட்டசபை தேர்தல் - 74.24வீதம் அதிமுக ஆட்சி தொடர்ந்தது
2021 சட்டசபை தேர்தல் - 72.73வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது.
பொதுவாக, வாக்குப்பதிவு அதிகரிக்கும்போது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற கருத்து உண்டு.
ஆட்சி மீதான அதிருப்தி அலையால் அதிகமானோர் வாக்களிக்க உந்தப்படுவார்கள் என்பது கடந்த காலம் தேர்தல் முடிவுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது என அய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எனினும், வாக்குப்பதிவு குறைந்தபோது ஆட்சி மாற்றமும், வாக்குப்பதிவு உயர்ந்தபோது ஆட்சி தொடர்ந்ததும் கூட நடந்துள்ளதாக குறி்ப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2021 தேர்தலிலேயே வாக்குப்பதிவு குறைந்தபோதும், அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது.
கடந்த தேர்தலில் 4.63 கோடி வாக்காளர்கள் மொத்தமாக வாக்களித்திருந்தனர். இந்த தேர்தலில் அது 4.87 கோடியாக அதிகரித்துள்ளது. சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பால் ஆட்சி மாற்றம் நடக்கும் எனச் சொல்ல முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73வீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த முறை வாக்குப்பதிவு வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்த வாக்குப்பதிவு உயர்வு எதை உணர்த்துகிறது? வாக்குப்பதிவு அதிகரிப்புக்கும், ஆட்சி மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இந்தியாவில் இருக்கும் தேர்தல் கொள்கை வகுப்பாளர்களால் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தமாக 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4.88 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூரில் 92.64வீத வாக்குகளும், சேலத்தில் 90.70வீத வாக்குகளும், தருமபுரியில் 90.14வீத வாக்குகளும், ஈரோட்டில் 90.10வீத வாக்குகளும், நாமக்கல்லில் 90வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் இதுவரையிலான தேர்தல்களில் வாக்குப்பதிவுகளின் அடிப்படையில்,
1967 சட்டசபை தேர்தல் - 76.57வீதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதன்முறையாக திமுக வென்றது
1971 சட்டசபை தேர்தல் - 72.10வீதம் திமுக ஆட்சி தொடர்ந்தது
1977 சட்டசபை தேர்தல் - 61.58வீதம் ஆட்சி மாற்றம் நடைபெற்று முதன்முறையாக அதிமுக வெற்றி பெற்றது
1980 சட்டசபை தேர்தல் - 65.42வீதம் அதிமுக ஆட்சி தொடர்ந்தது
1984 சட்டசபை தேர்தல் - 73.47வீதம் அதிமுக ஆட்சி தொடர்ந்தது
1989 சட்டசபை தேர்தல் - 69.69வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
1991 சட்டசபை தேர்தல்- 63.84வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது முதன்முறையாக ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்.
1996 சட்டசபை தேர்தல் - 66.95வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
2001 சட்டசபை தேர்தல் - 59.07வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது
2006 சட்டசபை தேர்தல் - 70.82வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
2011 சட்டசபை தேர்தல் - 78.01வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது
2016 சட்டசபை தேர்தல் - 74.24வீதம் அதிமுக ஆட்சி தொடர்ந்தது
2021 சட்டசபை தேர்தல் - 72.73வீதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது.
பொதுவாக, வாக்குப்பதிவு அதிகரிக்கும்போது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற கருத்து உண்டு.
ஆட்சி மீதான அதிருப்தி அலையால் அதிகமானோர் வாக்களிக்க உந்தப்படுவார்கள் என்பது கடந்த காலம் தேர்தல் முடிவுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது என அய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எனினும், வாக்குப்பதிவு குறைந்தபோது ஆட்சி மாற்றமும், வாக்குப்பதிவு உயர்ந்தபோது ஆட்சி தொடர்ந்ததும் கூட நடந்துள்ளதாக குறி்ப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2021 தேர்தலிலேயே வாக்குப்பதிவு குறைந்தபோதும், அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது.
கடந்த தேர்தலில் 4.63 கோடி வாக்காளர்கள் மொத்தமாக வாக்களித்திருந்தனர். இந்த தேர்தலில் அது 4.87 கோடியாக அதிகரித்துள்ளது. சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பால் ஆட்சி மாற்றம் நடக்கும் எனச் சொல்ல முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
No comments: