யாழில் தேசியக் கொடி ஏற்றியதில் சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் சந்திரசேகரன்!
யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குடை பிடித்தவாறு தேசியக்கொடி ஏற்றிய விவகாரமானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (26.12.2025) நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் சந்திரசேகரன் குடையை பிடித்தவாறு தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.
தேசியக் கொடி என்பது நாட்டின் கொடி. அதனை ஏற்றுகின்ற போது அதற்குரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும்.
எனினும், முன்மாதிரியாக செயற்பட வேண்டிய அமைச்சரே இவ்வாறு தேசியக் கொடியை ஏற்றிய சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: