News Just In

12/27/2025 03:17:00 PM

நீதிமன்றில் முன்னிலையான டக்ளஸ் தேவானந்தா! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

நீதிமன்றில் முன்னிலையான டக்ளஸ் தேவானந்தா! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு



கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று(27.12.2025) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனது தனிப்பட்ட துப்பாக்கியைச் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் கையளித்த சம்பவம் தொடர்பாக, அவர் நேற்றையதினம் (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெலிவேரியவில் உள்ள ஒரு கல்வெர்ட்டுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தால் அவருக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று(26) அழைக்கப்பட்டிருந்தார்.

வெலிவேரியவில் மீட்கப்பட்ட துப்பாக்கி, தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியே என்பதை விசாரணையின்போது டக்ளஸ் தேவானந்தா ஏற்றுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில்,அவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றையதினம்(27) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மேலும், இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

No comments: