News Just In

9/01/2025 03:47:00 PM

யாழில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம்

யாழில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம்



குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் இன்று (01.09.2025) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டச் செயலகத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு முத்திரையும் தபால் தலையும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால ,கடற்றொழில் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் , பிரதியமைச்சர்களான சுனில் வட்டஹல. நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சி்விகே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

No comments: