News Just In

6/14/2025 07:01:00 PM

கனகர்கிராம மக்களுக்கு குடிநீர்கிணறு!

கனகர்கிராம மக்களுக்கு குடிநீர்கிணறு!

1990ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள இராணுவத்தின் அராஜகத்தால் முற்றாக அழிக்கப்பட்ட கிராமமே  60ம்கட்டையில் அமைந்த கனகர்கிராமம் .அன்றிலிருந்து இன்றுவரை அக்கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 278 குடும்பங்கள்மீள் குடியேற்றப்படவில்லை

 இவ்வாறானசூழ்நிலையில்83குடும்பங்கள்அங்குகுடியமரஅனுமதிக்கப்பட்டபோதும்அந்தமக்களுக்குஅரசின்எந்தஉதவியும்இன்றுவரைகிடைக்கப்பெற வில்லை.ஒரு சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் உதவிகள் மூலம் குடியிருப்புக்கு பொருத்தமற்றதற்காலிக கொட்டில்கள் சிலஅமைக்கப்பட்டது.காட்டுயானைகளின்அச்சுறுத்தல்,குடிநீர்ப்
பிரச்சனைஎன்பவற்றுக்கு முகம் கொடுக்கமுடியாத சூழ்நிலையில் பத்துக்கு குறைவானவர்களே நிரந்தரமாக அங்கு குடியமர்ந்தனர்.இவர்கள் தமது குடிநீர் தேவையைபூர்த்தி செய்ய 5km வரை பயனிக்கவேண்டியிருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில்(SAFE)குமுகாய மேம்பாட்டு மன்றம் கிழக்கு(Social Advancement Forum East)இன்வழிகாட்டுதலில் யாழ் நல்லூர் நாயன்மார்கட்டு இராசையா குகதாசன் குடும்பத்தினரால் நன்னீர் கிணறு ஒன்று தற்போது அமைக்கப்பட்டு நாளை மக்களின்பாவனைக்கு வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு அம்பாரை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடிஸ்வரன் பிரதமஅதிதியாக கலந்து கொள்வதுடன்
அக்கிராமத்தில் பயனாளி ஒருவருக்குவீடொன்றை்அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல்நடுகையையும் மேற்கொள்வார்.

No comments: