News Just In

4/21/2024 07:06:00 PM

தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது கோர விபத்து! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!




தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களுள் 8 வயதுடைய சிறுமி ஒருவருடன் பார்வையாளர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய நால்வரும் குறித்த பந்தயப் போட்டியில் கடமையாற்றிய அதிகாரிகள் என்பதுடன், சிறுமியைத் தவிர உயிரிழந்த ஏனைய அனைவரும் ஆண்கள் ஆவர்.

தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 6 பேர் விபத்தில் இதுவரை உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், உயிரிழந்தவர்களுள் ஒரு குழந்தையும் நான்கு டிராக் மார்ஷல்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments: