ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பொரளையில் கறுப்பு ஜூலையை குறிக்கும் நிகழ்வை குழப்பிய பொலிஸார் படையினருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை சம்பவம் குறித்து சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ள நிலையி;ல் இன்றைய அனைத்து கட்சி கூட்டத்திற்கு முன்னதாக ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கறுப்புஜூலை நிகழ்வை குழப்பிய பொலிஸார் படையினருக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பில் கறுப்புஜூலையை குறிக்கும் நிகழ்வுகளை சிங்கள பேரினவாதிகளும் இலங்கை பொலிஸாரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
கறுப்பு ஜுலை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் விளக்குகளை ஏற்றியவேளை பொலிஸார் அவர்களை கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்து அகற்றினர்.
No comments: