News Just In

6/17/2023 02:05:00 PM

வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கு வழங்கப்பட்டுள்ள நியமனம்!




வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வடக்கின் 5 மாவட்டங்களினதும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளரால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநராகக் கடந்த மாதம் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டிருந்தார்.
மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்

அவருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைமைப் பதவி வழங்கப்படவில்லை.

இதனால் வடக்கின் 5 மாவட்டங்களிலும் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், வடக்கின் 5 மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக அவரை ஜனாதிபதியின் செயலாளர் நியமித்து மாவட்ட செயலகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

No comments: