News Just In

4/07/2023 09:11:00 AM

ஈஸ்டர் வாரத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

ஈஸ்டர் வாரத்தை முன்னிட்டு நாட்டில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று முதல் இந்த விசேட பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஈஸ்டர் வாரத்தில் நாடு முழுவதிலும் காணப்படும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை முதல் இந்த விசேட பாதுகாப்பு வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேவை ஏற்பட்டால் பொலிஸாருக்கு உதவும் வகையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோரும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: