- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் 12வது கலை பண்பாட்டு விழா திங்கள்கிழமை 07.11.2022 காலை 9 மணிக்கு தோப்பூர் பாட்டாளிபுரம் இளைஞர் வள நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் பொன் சற்சிவானந்தம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் வளநிலைய மண்டபம்; திறந்து வைப்பு. தமிழ் மொழி வாழ்த்து, பிரதேசத்தின் மூத்த கவிஞர் பரம்சோதி பற்றிய நினைவுரை, கலை நிகழ்வுகள், கவியரங்கு,கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகத்துறையினரைக் கௌரவித்தல், விழிப்புணர்வு விவாத அரங்கு> வில்லுப்பாட்டு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரண்யா சுதர்ஸன் கலந்துகொள்கின்ற அதேவேளை மூதூர் உதவிக் கல்விப் பணிப்பாளர் பி. கருணாகரன், சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்களான வி. குணபால, வி. கோணேஸ்வரன், கே. அன்பழகன், மூத்த எழுத்தாளரான கே. தேவகடாட்சம் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றிச் சிறப்பிக்கவுள்ளனர்.
No comments: