விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் நாளைய தினமும் (2022.04.10) இடம்பெறும்.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன்,தலைமையில் கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட சந்தையினை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் திறந்துவைத்தார்.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் கே.பரமலிங்கம், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
No comments: