News Just In

1/02/2022 06:34:00 AM

மட்டக்களப்பு எமக்காக நாம் அமைப்பின் ஊடாக வசதிகுறைந்த 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை நிலையத்தின் வேண்டுகோளை ஏற்று சித்தாண்டி கிராமத்தில் வசதிகுறைந்த 25 மாணவர்களுக்கு மட்டக்களப்பு எமக்காக நாம் அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை நிலையத்தில் 01.01.2022 ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தலைவர் திரு தீபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எமக்காக நாம் அமைப்பின் இணைப்பாளர்களான திரு.நே.பிருந்தாபன் மற்றும் திரு.தரணிராஜ் ,சிகண்டி அறக்கட்டளை நிலையத்தில் தலைவர் திரு.முரளிதரன் செயலாளர் திரு.உதயவேந்தன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வை சிகண்டி அறக்கட்டளை நிலையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒழுங்கமைத்து தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.








No comments: