உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆய்வாளர்கள் வரிசையில் இலங்கை ஆய்வாளர் ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
உலகின் மிகப் பெரிய விஞ்ஞான ஆய்வு தகவ்களை திரட்டும் நிறுவனமான கிளராடிவ் ஆய்வாளர் நிறுவனம் ஆண்டு தோறும் வெளியிடும் பட்டியலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மெத்திக்கா விதானகே இந்தப் பட்டியலில் இணைந்து கொண்டுள்ளார். இந்த பட்டியலில் முதல் தடவையாக இலங்கையர் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.
மிகவும் அரிதாகவே இந்த வரிசையில் இடம் கிடைக்கப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பத்து ஆண்டுகளில் இணைய தளங்களில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கைகள் மற்றும் அவற்றின் பெறுமதி என்பனவற்றை கருத்திற் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
No comments: