தங்களது சம்பள உயர்வு, நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்குள் தம்மை உள்வாங்கியுள்ளதாக அறிகின்ற போதும் அது தங்களுக்கு சாத்தியமற்றது என்றும் கடந்த நான்கு வருடங்களாக குறித்த டெங்கு கட்டுப்பாட்டு பணியினை முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி குறித்த கோரிக்கைகளுக்கான தீர்வினை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் கோரி பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகஸ்தர்கள் எங்களுக்கு நிரந்தர நியமனம் வேண்டும் அரசே!, நுளம்பு கட்டுப்பாட்டு கள உத்தியோகஸ்தர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் அநியாய செய்ய வேண்டாம், நுளம்பு கள உதவியாளர்கள் உரிமைகளை மீற வேண்டாம், அரசே நுளம்பு கள உத்தியோகஸ்தர்களை சுகாதார திணைக்களத்திற்குள் உள்வாங்கு, அரசே மாகாண சபைக்குள் உள்ளடக்கி எங்களை 180 நாள் வேலைத்திட்டத்திற்குள் உள்ளடக்கு போன்ற பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments: