இந்நிலைமையில் கல்வி அமைச்சு, மாகாண மற்றும் வலய கல்வி பணிமனைகள் மூலமாக ஆசிரியர்கள் சுயமாக மேற்கொள்ளும் நிகழ்நிலை கல்வி செயற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகின்றன. ஆசிரியர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் அவர்கள் சுயமாக முன்வந்து செய்யும் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் சில வலய கல்விப் பணிமனைகள் நிகழ்நிலை கல்வி தொடர்பாக ஆசிரியர்களுக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்து வருகின்றன. அனேகமான மாணவர்கள் நிகழ்நிலை கற்றலில் பங்கு பற்றாத போதிலும் அவ்வாறான மாணவர்களை எப்படியாவது பங்குபெறச் செய்யுமாறு வலய கல்விப் பணிமனைகள் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர்.
அதிபர்கள் ,ஆசியர்கள் ஆகிய நாம் மேற்படி அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் சுயமாக நாம் மேற்கொள்ளும் சேவைகளை கண்காணிப்பு செய்ய இடம் கொடுக்காமல் இருக்குமாறு அனைத்து ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எவ்வித வசதிகளையும் வழங்காமல் நிகழ்நிலை கற்றலுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதும், மேற்பார்வை செய்வதையும் உடன் நிறுத்துமாறு கல்வி அதிகாரிகளை கேட்டுக்கொள்வதோடு, கடமையோடு தொடர்புபடாத சுயமாக கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களை நாம் கேட்டுக் கொள்வது இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய வேண்டாம் என்பதே ஆகும்.
இந்த அறிக்கையில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்
ஆகியோர் கையொப்பம் இட்டுள்ள தோடு இலங்கையில் உள்ள பல முன்னணி ஆசிரியர் சங்கங்கள் இணைந்து இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
3.அகில் இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்
4. இலங்கை அதிபர் சேவை சங்கம்
5. இலங்கை தேசிய அதிபர் சங்கம்
6. சுயாதீன கல்வி சேவை சங்கம்
7. இலங்கை முற்போக்கு ஆசிரியர் சங்கம்
8. சுயாதீன இலங்கை ஆசிரியர் சங்கம்
9. பயிற்றப்பட்ட மற்றும் கல்வியற் கல்லூரி ஆசிரியர் சங்கம்
10. இலங்கை தேசிய ஆசிரியர் சங்கம்
11. இலங்கை தொழில்நுட்ப விஞ்ஞான, விஞ்ஞான டிப்ளோமா தாரி சங்கம்
No comments: