News Just In

4/11/2021 11:37:00 AM

பொது மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!


சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றாவிடின் மிகுந்த சவாலுக்கு மத்தியில் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் சீர்குலையுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தாண்டு காலத்தில் முகக் கவசங்களை அணிந்து, சமூக இடைவெளிகளைப் பேணி நடந்து கொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments: