News Just In

4/06/2026 07:00:00 PM

இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! நாளை ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! நாளை ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்


வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (06) பிற்பகல் 3.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (07) வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் நிலவும் வெப்ப அலை, மனித உடலால் உணரக்கூடிய அளவில் உள்ளது என்றும், இது கவனம் தேவைப்படும் நிலை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
.

இலங்கையில் மே அல்லது ஜூன் மாதங்களில் இயல்பான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணநாயக்க தெரிவித்துள்ளார்.

"தற்போது இருப்பதை விட தென்மேற்குப் பருவமழையின் போது மழைப்பொழிவு குறையக்கூடும்... அதாவது, அது 30% க்கும் அதிகமாகக் குறையலாம். ஆனால் மே மாதம் என்பது பருவமழையின் தொடக்கம் மட்டுமே. மே மற்றும் ஜூன் மாதங்களில் இயல்பான மழைப்பொழிவு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது," என்று கூறியுள்ளார். இதற்கிடையில், ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் உச்சியில் சூரியன் நேரடியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலில், பல மாகாணங்களில் உள்ள சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தாலும், தற்போது நிலவும் வறண்ட வானிலை அப்படியே தொடரும் என்று மேலும் தெரிவித்துள்ளது.

No comments: