News Just In

4/28/2026 05:15:00 PM

யாழ்.கடற்றொழிலாளரை கடத்திய தமிழக கடற்றொழிலாளர்கள்! வெளியான காணொளியால் பரபரப்பு

யாழ்.கடற்றொழிலாளரை கடத்திய தமிழக கடற்றொழிலாளர்கள்! வெளியான காணொளியால் பரபரப்பு



யாழ்ப்பாணம் - பலாலி வடக்கிலிருந்து நேற்றுமுன்தினம்(26) 15 கடல் மைல் தூரத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்கள் மூவர் மீது தமிழக கடற்றொழிலாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் ஐந்து தமிழக கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது வாளால் வெட்டியும், பெற்றோல் குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது, தமிழக கடற்றொழிலாளர்கள் ஒரு இலங்கை கடற்றொழிலாளரரை பலவந்தமாக தமது படகில் ஏற்றிச் சென்றுள்ள நிலையில், மற்றைய இருவர் தப்பி மீண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடத்திச் செல்லப்பப்பட்ட கடற்றொழிலாளரை கயிற்றால் கட்டி அடித்து துன்புறுத்தும் காணொளிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கீழையூர் காவல்துறையினர் குறித்த யாழ்ப்பாண கடற்தொழிலாளரை மீட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தாக்குதலுக்கு இலக்காகி, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமையால் அவரை நாகப்பட்டினம் அரச மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளனர்.

No comments: