News Just In

6/20/2025 01:26:00 PM

சர்வதேச யோகா தின நிகழ்வு!

சர்வதேச யோகா தின நிகழ்வு!


அபு அலா

சர்வதேச யோகா தினத்தையொட்டி சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஆயுள்வேத திணைக்களம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து "ஒரு பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கான யோகா" எனும் தொனிப் பொருளில் யோகா தின பயிற்சி நிகழ்வுகள் நேற்று (19) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைவாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபிலின் வழிகாட்டலின் கீழ், திருகோணமலை கோபாலபுரம் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் என்.நிரஞ்சன் தலைமையில், கோபாலபுரம் மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் யோகா தின நிகழ்வு இடம்பெற்றது.

யோகா பயிற்சியை செய்வதன் மூலம் எனது உடலில் ஏற்படுகின்ற பல தொற்றா நோய்களுக்கு சிறந்த தீர்வுகள் கிடைக்கின்றது. இப்பயிற்சியை தினமும் கடைப்பிடித்து செய்வோமாக இருந்தால் எமது உடல் ஆரோக்கியத்தையும், தொற்றா நோயின் தாக்கத்திலிருந்தும் எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்று வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் என்.நிரஞ்சன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: