News Just In

4/29/2025 12:09:00 PM

மே 3 இலிருந்து அமைதிக் காலம் ஆரம்பம்; தேர்தல் பிரசாரங்களுக்கு முற்றாக தடை!

மே 3 இலிருந்து அமைதிக் காலம் ஆரம்பம்; தேர்தல் பிரசாரங்களுக்கு முற்றாக தடை



நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே 3 ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் ஆரம்பமாகிறது.

அதன்படி, உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை (03) நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது

எதிர்வரும் 06 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: