News Just In

1/27/2025 07:03:00 PM

மட்ட . கொக்குவில் மின்சாரதூணுடன் வான் மோதி விபத்து - சாரதி கைது!

மட்ட . கொக்குவில் மின்சாரதூணுடன் வான் மோதி விபத்து - சாரதி கைது





மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில் வீதியைவிட்டு விலகிய வான் மின்சரது தூணுடன் மோதிய விபத்தில் மின்சார தூண் உடைந்து வீழ்ந்ததுடன் வான் பலத்த சேதமடைந்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும், நேற்று (26) வீதியில் வேகமாக பிரயாணித்த வான் வேககட்டுப்பட்டை மீறி வீதியைவிட்டு விலகி மின்சாரதூணுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வான் பலத்த சேதமடைந்துள்ளதுடன் மின்சாரதூண் உடைந்து வீழந்ததையடுத்து அந்த பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் தடைப்பட்டதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: