ஒற்றைத் தலைமை ஏற்படுத்துவது குறித்து தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்கிறார் சிறிகாந்தா
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஒற்றைத் தலைமை ஏற்படுத்துவது குறித்து தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் நியமிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஒற்றைத் தலைமையை நியமிக்கவேண்டும் என அண்மையில் நடந்த கூட்டத்தில் ஒரு சிலர் கருத்து வெளியிட்டனர்.
ஆயினும் அந்தக் கருத்து உடனடியாகவே நிராகரிக்கப்பட்டது.
அவ்வாறான தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை. இனிமேலும் அப்படி ஒரு தீர்மானம் எட்டப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.
1/16/2025 06:39:00 PM
Home
/
Unlabelled
/
ஒற்றைத் தலைமை ஏற்படுத்துவது குறித்து தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்கிறார் சிறிகாந்தா
ஒற்றைத் தலைமை ஏற்படுத்துவது குறித்து தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்கிறார் சிறிகாந்தா
Subscribe to:
Post Comments (Atom)
No comments: