News Just In

11/10/2024 10:12:00 AM

எமில்காந்தனின் எச்சரிக்கை!







தமிழ் வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தி முஸ்லீம் வேட்பாளர்களை உள்நுளைத்து தமிழ்மக்களின் வாக்குகளை வேட்டையாட முஸ்லீம் அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுயேட்சை வேட்பாளர் எமில்காந்தன், தமிழ்மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் .

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வன்னியில் கடுமையான ஒரு போட்டி நிலவுகின்ற இந்த நேரத்தில் தமிழ்மக்களிடம் நாங்கள் அன்பான ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம். கடந்த 15 வருடகால அரசியலில் தமிழர்களின்உரிமைக்காக அரசியல் செய்துவந்த கட்சிகள் தங்களது தனிப்பட்ட அதிகாரத்திற்கும் பதவிகளுக்கும் போட்டியிட்டு தமிழ்மக்களை தலைமையற்ற சமூகமாக நடுத்தெருவில் விட்டுச்சென்றுள்ளனர்.

அந்த அதிகாரபோட்டியில் இரண்டாக பிரிந்து இன்றும் தலைமை இல்லாமல் மக்களை பிழையாக வழிநாடத்திவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். விசேடமாக வன்னிமாவட்டத்தில் இந்த15வருட அரசியலில் முஸ்லீம் அரசியல்வாதிகள் களநிலவரங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தும்நிலைமை இருந்துள்ளதை பார்க்கின்றோம்.

தமிழ்மக்களை விட குறைவான வாக்குகளை கொண்டுள்ள முஸ்லீம்கள் தமது அரசியல்தேவையை தமிழ்மக்களின் மீது பயணம்செய்தே பெற்றுக்கொள்கின்றனர்.

இந்த பாராளுமன்றத்தேர்தலிலும் புதியவியூகங்களை அமைத்து தமிழ்வேட்பாளர்களை உள்வாங்கி தமது வாக்குவேட்டையினை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தி முஸ்லீம் வேட்பாளர்களை உள்நுளைத்து தமிழ் வாக்குகளை பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழர்கள் எந்தவகையில் வாக்களித்தாலும் முஸ்லீம்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்பும் நோக்குடன் கட்சிதமாக அவர்கள் செயலாற்றி வருகின்றனர்.

எனவே தமிழ் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்க போகின்றீர்கள். அது எத்தகைய வேட்பாளர்களை கொண்டுள்ளது. அதில் தமிழர்கள் முற்றுமுழுதாக உள்ளார்களா? அவர்கள் புதியமுகங்களா? அனுபவம் ஆற்றல்உள்ளவர்களா? என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள்.

அவர்களது கொள்கையும் சித்தாந்தமும் மிக முக்கியமானது. சிலர் பழைய சித்தாந்தங்களுடன் புதிய முகங்களை காட்டி வாக்குகேட்டு வந்துள்ளனர்.

வன்னி தேர்த ல்களம் முக்கியமானது. இங்கு அனைத்து துறைகளிலும் தமிழ்மக்கள் பலங்குன்றியே உள்ளனர்.

வவுனியா நகரத்தின் பொருளாதாரகட்டமைப்பும் ஆதிக்கமும் முஸ்லீம்களின் கைகளில் உள்ளது. அதற்கேற்றவாறாக முஸ்லீம் அரசியல்வாதிகள் தமது மக்களுக்கு தேவையானதை செய்துகொடுத்துள்ளனர்.

கடந்த காலத்தில் இந்த பகுதியை சேர்ந்த இரு முஸ்லீம்கள் அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். அவர்களுக்கு தமிழ் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் வாக்களித்ததை அந்த தரப்புகள் சாதகமாக பயன்படுத்தியதன் விளைவே அது.

இந்த விளைவை 15வருடங்களாக கண்டுகொண்ட தமிழ்த்தேசிய அரசியல்கட்சிகளுக்கு வன்னி மக்கள் மீது அக்கறை இருந்ததாக தெரியவில்லை.

இம்முறையும் இதே நிலைப்பாட்டை முஸ்லீம் அரசியல்வாதிகள் கையில் எடுத்து இரண்டிற்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நுட்பமான முறையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.

கோடாலிச்சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் நாங்கள் சமூக அக்கறை கொண்டவர்களை, வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம்.

எனவே தலைமைத்துவம் இல்லாத தமிழரசுக்கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் நீங்கள் வாக்களிக்க கூடாது.

முஸ்லீம் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கட்சிகளையும் புறந்தள்ளி எமது கோடாலி சின்னத்திற்கு வாக்களித்து வன்னி மண்ணை பாதுகாக்குமாறு உங்களிடம் வேண்டிநிற்கின்றோம்" என்றார்

No comments: