News Just In

11/17/2024 04:45:00 PM

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவராக சிறிதரன் தெரிவு!

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவராக சிறிதரன் தெரிவு!




தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார்.

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக சிறிதரன் இதன்போது தெரிவித்தார்

No comments: