News Just In

11/11/2024 01:29:00 PM

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் சிக்கல் - சிறுவர்களிடையே தலைதூக்கும் வைரஸ்!

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் சிக்கல் - சிறுவர்களிடையே தலைதூக்கும் வைரஸ்




இந்த நாட்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார்.

இந்த காய்ச்சல் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக குழந்தைகளுக்கு இடையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இது இருமல் மற்றும் சளியுடன் கூடிய காய்ச்சலாகும்.

மேலும், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி இருந்தால் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறியாகும்.

எனவே, மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உரிய இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் வீடு, பாடசாலை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments: