News Just In

10/19/2024 03:51:00 PM

சர்வதேச நாடுகளை வென்று 3வது இடத்தை பெற்ற யாழை சேர்ந்த பெண்!

சர்வதேச நாடுகளை வென்று 3வது இடத்தை பெற்ற யாழை சேர்ந்த பெண்!



கம்போடியா நாட்டில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் அவர்கள் 3வது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற குறித்த போட்டியில் 19 நாடுகள் போட்டியிட்டுள்ளன.

APHCA Cambodia Hair , Make up & Beauty Olympics 2024 போட்டிகள் ஆண்டு தோறும் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுவது

இந்த போட்டியானது இந்த ஆண்டும் கம்போடியாவில் நடைபெற்றது.

எல்லாமாக 19 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த 7 போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள்.

அங்கு நடைபெற்ற மணப்பெண் அலங்காரப் போட்டியில் இலங்கை – யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையைச் சேர்ந்த அனித்தா விநயகாந்தன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு வெற்றியீட்டிய பெண்மணிக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments: