News Just In

6/09/2024 02:03:00 PM

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!





மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் 50 மில்லி மீற்றுருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

No comments: