News Just In

6/20/2024 06:10:00 PM

இறுதி நேரத்தில் ஜெய்சங்கருடனான சந்திப்பில் பங்கேற்காத சம்பந்தன்!




இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் (R. Sampanthan) திடீர் சுகயீனம் காரணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான சந்திப்பில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று (20.06.2024) மாலை 5 மணியளவில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் முக்கியஸ்தர்களைச் சந்திக்கவுள்ளார்.

இதன்போது, வடக்கு - கிழக்கு நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்நிலையில், மேற்படி சந்திப்பில் இரா.சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: