News Just In

6/09/2024 04:37:00 PM

திருமலை வாக்குகளை சூறையாடவே பொது வேட்பாளர் தெரிவு_தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்!



 ஹஸ்பர் ஏ.எச்
தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையே ஜனாதிபதி பொது வேட்பாளர் இதனை நம்பாமல் தனித் தனியான வேட்பாளர் இன்றி தேசிய மக்கள் சக்தியுடன் இணையுங்கள் என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச் சந்திர தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார நடவடிக்கையும் துண்டு பிரசுர வினியோகமும் வாகனங்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் ஊர்வலமும் இன்று (09) கிண்ணியாவில் இடம் பெற்றது.இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்ஊழல் மோசடியில் ஈடுபட்ட ராஜபக்ச கும்பல்களை
ஜனாதிபதி பாதுகாத்து வருகிறார். ஒன்றல்ல ஆயிரம் கூட்டணிகளை உருவாக்கினாலும் கூட மக்கள் திசை காட்டியுடன் ஒன்று சேர்ந்துள்ளனர் என்றார்.

No comments: