News Just In

6/07/2024 06:42:00 PM

சுவிட்சர்லாந்தில் ஆரம்பமான தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் பொருளாதார உச்சி மகாநாடு!




தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மகாநாடுஆரம்பமாகியுள்ளது.

குறித்த மாநாடானது சுவிஸ் நாட்டில் டாவோஸ் (Switzerland Davos) நகரில் இன்று (07) இடம்பெற்றுள்ளது.

சங்கே முழங்கு என்ற கோசத்துடனும், திருக்குறள் ஒலிக்க ஆரம்பமான நிகழ்வில் உலகின் பல நாடுகளிலிருந்து 500ற்கு மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் , தொழில் முனைவோர் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பல்வேறு நாட்டு பிரமுகர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட பல பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் உலகளாவிய தமிழர்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஆராயவுள்ளனர்.

இதன்படி Davos மண்டபத்தில் இன்று தொடக்கம் 9ஆம் திகதிவரை உலகப்பொருளாதார மகாநாடு நடைபெறவுள்ளது.

உலகலாவிய The RISE நிறுவனத்தின் சுவிஸ்நாட்டிற்கான ஒருங்கினைப்பாளரும் தலைவருமான சிறி இராசமாணிக்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சுவிஸ்நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், மசடோனியா நாட்டின் ஜனாதிபதி, அல்பானிய பிரதமர், கொசோவோ நாட்டின் பிரதமர் உட்பட தமிழக அரசின் அமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments: