News Just In

5/23/2024 03:57:00 PM

சூறாவளி உருவாகும் சாத்தியம்!




தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் ஒன்று உருவாகி உள்ளது.இதனை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தி உள்ளன.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் நேற்றிரவு தாழமுக்க நிலையொன்று உருவாகியுள்ளது.

இது எதிர்வரும் நாட்களில் வடகிழக்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைந்து நாளை தாழமுக்கமாக வலுவடைந்து, எதிர்வரும் 25ஆம் திகதியளவில் சூறாவளியாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

No comments: