News Just In

4/22/2024 01:31:00 PM

காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனை வலயக்கல்வி அலுவலகம் மூன்று மில்லியனுக்கு மேல் நிதி உதவி!


நூருல் ஹுதா உமர்
கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் ஆகியோரின் வழிகாட்டலில் காஸா சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிதியத்திற்கு கல்முனை வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்களின் நிதிப்பங்களிப்பில் ரூபா 3,128,500/- நிதியினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (22) கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்றது.

வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்கள் குறித்த தொகைக்கான ஆவணத்தை கணக்காளர் வை.ஹபீபுள்ளாஹ் அவர்களிடம் பிரதி கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்), உதவிக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் முன்னிலையில் கையளித்தார்.

இந்நிகழ்வில் பிரதி கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) எம்.எச். ஜாபீர், உதவிக்கல்வி பணிப்பாளர்களான யூ.எல். றியால், எஸ். சஞ்சீவன், கல்முனை வலய பாடசாலை அதிபர்கள், பிரதி உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments: