வல்வெட்டித்துறையிலுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லத்தில் சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடலின் இறுதி ஊர்வலம் நகர்ந்து வல்வெட்டித்துறை ஆலடியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணியிலும் சிறிது நேரம் சாந்தனின் புகழுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது சாந்தனின் புகழுடலுக்கு சிவப்பு மஞ்சள் நிற கொடிகள் போர்க்கப்பட்டு பலரும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக உடுப்பிட்டி - இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது.
No comments: