News Just In

3/17/2024 07:25:00 PM

அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!




அரசியல்வாதிகள் மற்றும் வேறு நபர்களுக்கு தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் நீக்கப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரச புலனாய்வு சேவைக்கு அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.

அரசியல்வாதிகள் மற்றும் வேறு நபர்களுக்கு தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் நீக்கப்படுவார்கள்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத நபர்களுக்காக சுமார் ஐயாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: