News Just In

3/20/2024 07:51:00 PM

மட்டக்களப்பில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!



மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை நேற்று (19.03.2024) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஒருவாரத்தில் 5 போதை பொருள் வியாபாரிகளை கைது செய்து நீதிமன்ற அனுமதியை பெற்று 3 நாட்கள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் கூறியுள்ளனர்.

யுக்தி நடவடிக்கையின் கீழ் காத்தான்குடி பொலிஸார் போதை பொருள் வியாபாரிகளை கைது செய்துவருகின்ற நிலையில் கடந்த ஒருவாரத்தில் 5 வியாபாரிகளை 400 மில்லிகிராம் தொடக்கம் 3 கிராம் வரையிலான ஐஸ் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட 5 பேரும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது தொடக்கம் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் விசாரணையின் பின்னர் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

No comments: