News Just In

2/05/2024 04:55:00 AM

வேலன் சுவாமியுடன் முரன்பட்ட சாணக்கியன்!





என்னை நம்பி வந்த பொதுமக்களின் பாதுகாப்புக்கு நான் தான் பொறுப்பு என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், வேலன் சுவாமிகளுக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வடக்கு - கிழக்கு தமிழர் பகுதிகளில் இந்த சுதந்திர தினம் கரி நாளாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மட்டக்களப்பில் இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையில், சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டிப்பதற்கு பொதுமக்கள் ஒன்று திரண்டிருந்தனர்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அங்கு இருந்து வேலன் சுவாமிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகிய இருவருக்கும் முரண்பாடான நிலை ஏற்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட சாணக்கியன், முறுகல் நிலை ஏற்படுத்தாமல் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பே எனக்கு முக்கியம் என்றும், அதை தவிர்த்து முறுகல் நிலை ஏற்படுத்துவதாயின் நீங்கள் தனியே சென்று இந்த எதிர்ப்பினை மேற்கொள்ளலாம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.


No comments: