தற்போது பெய்து வருகின்ற அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் தமது இயல்பு நிலைமை பாதிக்கப்பட்டுள்ள சுமார் 30க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மாவடிப்பள்ளி புதிய ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினரினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த பணியில் பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கு மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகம் பக்கபலாமாக இருந்து செயற்பட்டதுடன் இதில் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமிய அபிவிருத்தி சங்கம் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்
No comments: