News Just In

1/16/2024 01:58:00 PM

பண்ணையாளர்களின் கறுப்புப் பொங்கல் நிகழ்வு மட்டக்களப்பில்!



இன்றைய தினம் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள், விவசாய அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள், மத தலைவர்கள், சமூக அமைப்புக்கள் சகிதம் கறுப்புப் பொங்கல் எனப் பெயரிடப்பட்டு அதுவும் இன்றைய மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஓர் அமைதி வழி போராட்டமாகவும் மற்றும் நடை பவனியாகவும் மட்டக்களப்பில் இடம்பெற்றது. மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களினால் வதைக்க வதைக்க ஈவு இரக்கம் இன்றி கொல்லப்படுவதும் காயப்படுவதும் தொடர்ந்த வண்ணமுள்ளது.


கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் 120 நாட்களையும் தாண்டியுள்ள நிலையில் மேய்ச்சல் தரைகளை மீட்டு தருமாறு தெரிவித்து கால்நடை பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ் போராட்டமானது அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கான தீர்வுகள் இதுவரையில் வழங்க படாமையினால் மிகவும் பாரிய பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர். இவ் போரட்டத்தில் நானும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் அவர்களும் மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

No comments: