News Just In

12/04/2023 01:38:00 PM

தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் ? பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழிவு





இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அங்கு கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் மத்திய செயற்குழு கூடி புதிய தலைவரை முடிவு செய்யும் என்றும், புதிய தலைமைக்கு அதிக வேட்பு மனுக்கள் வந்தால் பொதுக்குழு கூடி புதிய தலைமையை முடிவு செய்யும் என்றும் சமீபத்தில் கூடிய மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இதற்கு முன்னர் கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை, என்பதுடன் கட்சியால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவரே தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் இந்த முறை அந்த மரபு மாறும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் எதிர்வரும் தேர்தல்களில் சிறு கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைப்பதற்கும், ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கும் தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கைகள் பிரதான காரணியாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.


No comments: