News Just In

10/09/2023 11:04:00 AM

"நீதித்துறை மீது கை வைக்காதே" தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!


"நீதித்துறை மீது கை வைக்காதே" தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்



முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் 'தியாக தீபம்' திலீபனின் நினைவேந்தல் விவகாரம் போன்றவற்றில் மிகமுக்கிய தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் மிகையான அழுத்தங்கள் காரணமாகத் தனது அனைத்துப் பதவிகளிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இந்தநிலையில் நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நீதித்துறை மீது கை வைக்காதே

அந்தவகையில், கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், பெருமளவான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதித்துறை மீது கை வைக்காதே என்னும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்போது, அதிபர் சட்டத்தரணிகளான கே.வி.தவராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பெருமளவான சட்டத்தரணிகள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: