News Just In

10/08/2023 06:36:00 AM

பதிவாளர் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு, இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில், குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பதிவாளர் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

உள்விவகார இராஜாங்க அமைச்சின் முன்னேற்ற கூட்டம் நேற்று இடம்பெற்ற போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அதிகாரிகளின் கவனயீனம் அதிளவில் தவறுகள் ஏற்பட்ட நிலையில், இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

No comments: